கார்கில் போரில் வெள்ளி விழா ஆண்டு நினைவேந்தல்

குமாரபாளையம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய மாணவர் படை சார்பில் கார்கில் போரின் வெள்ளி விழா முன்னிட்டு மெழுகுவர்த்தி ஏந்தி உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது...
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய மாணவர் படை சார்பில் கார்கில் போர் நடைபெற்று 25 ஆண்டுகள் முடிவடைந்த நினைவு தினத்தை முன்னிட்டு கார்கில் போர் வெள்ளி விழா நடைபெற்றது இதில் குமாரபாளையம் காவல் உதவி ஆய்வாளர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கார்கில் போரில் நடைபெற்ற நிகழ்வுகளையும் மற்றும் போரில் உயிரிழந்த வீரர்கள் குறித்தும் தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு எடுத்து கூறப்பட்டது. இதனை அடுத்து இந்த கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவர்கள் உருவப் படத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story