ராணிப்பேட்டை பாலாற்றில் அடையாளம் தெரியாத பெண் சடலம் கண்டெடுப்பு போலீசார் விசாரணை

ராணிப்பேட்டை பாலாற்றில் அடையாளம் தெரியாத பெண் சடலம் கண்டெடுப்பு போலீசார் விசாரணை
பெண் சடலம்
ராணிப்பேட்டை அருகே உள்ள பாலாற்று நீரில் 40 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் யார் இவர் எதனால் இறந்தார் என போலீசார் பல்வேறு கோணங்களில் தொடர் விசாரணை. ராணிப்பேட்டை பாலாற்றில் தேங்கி உள்ள நீரில் இன்று காலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் மிதப்பதாக ராணிப்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு  விரைந்து சென்று நீரில் மிதந்த பெண் பிணத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர் மேலும் விசாரணையில் பிணமாக மிதக்கும் பெண்ணுக்கு  சுமார் 40 லிருந்து 45 வயதிற்குள் இருக்கும் என்பது தெரியவந்தது.. இதைத்தொடர்ந்து போலீசார் நீரில் மிதந்த  பெண் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அனுப்பி வைத்ததோடு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் பிணமாக கண்டெடுத்த பெண் யார் ? எந்த ஊரை சேர்ந்தவர்  இங்கு எப்படி வந்தார் என்பது குறித்து எந்த விவரமும் தெரியவில்லை தொடர்ந்து பாலாற்றிற்கு வந்த போது தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்தாரா.. அல்லது வேறு ஏதாவது காரணமா.. கொலை செய்யப்பட்டு ஆற்றில்  வீசப்பட்டாரா.. என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..
Next Story