தாளவாடி அருகே மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

தாளவாடி அருகே மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
தாளவாடிய அருகே மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏமாற்றமே என்ற கோஷத்துடன் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில்ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசை கண்டித்து பவானிசாகர் தபால் நிலையம் முன்பாக மாவட்ட துணை செயலாளர் ரமேஷ் அவர்கள் தலைமையில், மாவட்ட குழு உறுப்பினர் ஏ.பி.ராஜு மற்றும் ஒன்றிய தலைவர் T.சுப்பிரமணி ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story