சத்தியமங்கலம் அருகே கார் மற்றும் பிக்கப் வேன் நேருக்கு நேர் மோதி மூன்று மாணவர்கள் பலி

சத்தியமங்கலம் அருகே கார் மற்றும் பிக்கப் வேன் நேருக்கு நேர் மோதி மூன்று மாணவர்கள் பலி
கர்நாடக மாநிலத்தில் இருந்து தக்காளி பாரம் ஏற்றிய பிக்கப் வேன் சத்தியமங்கலம் - மைசூர் சாலையில் புதுவடவள்ளி முருகன் கோயில் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி நோக்கி வேகமாக சென்ற ஒரு கார் முருகன் கோயில் வளைவில் திரும்பிய போது கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த தக்காளி பாரம் ஏற்றிய பிக்கப் சரக்கு வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதற்கிடையே காருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த மற்றொரு காரும் மோதியது. இந்த விபத்தில் காரின் ஒகு பகுதி உருக்குலைந்து. அங்கு வந்த சத்தியமங்கலம் போலீசார் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். விசாரணையில் காரில் பயணித்த 5 பேரில் ஈரோட்டைச் சேர்ந்த முகில்நிவாஷ் 21, கால்பந்து வீரர் தர்மேஷ் 18, முதலாமாண்டு கல்லூரி மாணவர் ரோகித் 18 ஆகியோர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்து தெரியவந்தது. அங்கிருந்த கிராமமக்கள் உதவியுடன் போலீசார் காரில் சிக்கிய முகில்நிவாஷ் சகோதரர் ஆதி ஸ்ரீவாசன்,18, ஸ்ரீனிவாஷ் ஆகிய இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதலுதவிக்கு பின் மேல்சிகிச்சைக்காக ஈரோடு, கோவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story