ராமநாதபுரம் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

ராமநாதபுரத்தில் திமுக சார்பில் மத்திய அரசைக்கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரத்தில் திமுக சார்பில் மத்திய அரசைக்கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவுவாயிலில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் திமுக முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இதில் பேசிய ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் மத்திய பாசிச பாஜக அரசு தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய நிதியை ஒதுக்காமல் வஞ்சித்து விட்டது தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு 37,000 கோடி வேண்டும் என்று பலமுறை பாஜக அரசை கேட்டுக் கொண்டோம், ஆனால் வெரும் 200 கோடியை மட்டும் கொடுத்துவிட்டு நிதியை கொடுக்காமல் நிறுத்திவிட்டது. இந்தியாவில் இந்தியா கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு நிதியைஒதுக்காமல் பாஜா கூட்டணி கட்சிகளுக்கு மட்டும் நிதியை ஒதுக்குயுள்ளனர்.மேலும் மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணாமல் மத்திய அரசின் அமைச்சர்கள் பேசுவது போல் மீனவர்களிடத்தில் படம் காட்டி விட்டு செல்கின்றனர். மேலும் போதுமான வேலை வாய்ப்பு திட்டங்களையும் எந்த திட்டங்களையும் தமிழகத்திற்கு வழங்கவில்லை என்று கூறினார். இக்கூட்டத்தில் எம்பி நவாஸ்கனி, அவைத் தலைவர் சத்தியமூர்த்தி, ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் பிரவீன் மற்றும் ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
Next Story