பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வேன் ஓட்டுநர் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து அஞ்சலி எழுதினார்

பள்ளி குழந்தைகள் 20 பேரின்  உயிரை காப்பாற்றிய வேன் ஓட்டுநர் சேமலையப்பன் மறைவிற்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் நேரில் அஞ்சலி செலுத்தி ஆறுதல்
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள வெள்ளகோவில் பகுதியில் உள்ள தனியார் பள்ளி பேருந்து ஓட்டுனராக காங்கேயத்தைச் சேர்ந்தவர் சேலமலையப்பன். இவர் நேற்றுமுன்தினம் தனியார் பள்ளியில் இருந்து பள்ளி குழந்தைகளை பள்ளி முடிந்த பிறகு வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக பள்ளி வளாகத்தில் இருந்து பேருந்து ஒட்டிச்செல்லும் போது பாதி வழியில் திடீரென சேமலையப்பனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் தனியார் பள்ளி வாகன ஓட்டுனர் தனது வாகனத்தில் உள்ள 20 குழந்தைகளின் உயிரை கருத்தில் கொண்டு வாகனத்தை விபத்து ஏற்படாமல் சாமர்த்தியமாக சாலையின் ஓரமாக நிறுத்தினார். இதைத் தொடர்ந்து அவரது உயிர் பிரிந்தது. இதனை அடுத்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிஞ்சு குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய சேமலையப்பன் மறைவிற்கு  இரங்கல் செய்தியை தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து இன்று உயிரிழந்த தனியார் பள்ளி ஓட்டுநர் சேமலையப்பனுக்கு ரூ.5 லட்ச ரூபாய் நிதி வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.  இதைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இறந்து போன சேமலையப்பன் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில் சத்யா நகருக்கு வருகை புரிந்து சேமலையப்பன் பெற்றோர் சுப்பன் மற்றும் இறந்து போன சேமலையப்பன் மகன்களுக்கு  ஆறுதல் கூறினார்.
Next Story