ராமநாதபுரம் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

ராமநாதபுரத்தில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ராமநாதபுரம் அரண்மனை முன்பு இந்திய‌ தேசிய காங்கிரஸ் ராமநாதபுரம் மாவட்ட நகர் காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் மத்திய நிதிப் பகிர்வில் தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வரும் மத்திய பா.ஜ.க மோடி அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாநில பொதுக்குழு உறுப்பினர் சோ.பா.ரங்கநாதன் தலைமையில், பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ஜோதி பாலன், சரவண காந்தி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் ஆனந்த் குமார், மாவட்ட துணைத்தலைவர் துல்கீப் கான், ராமநாதபுரம் நகர் தலைவர் கோபி, ராமநாதபுரம் வட்டாரத்தலைவர் காருகுடி சேகர், மாவட்ட செய்தித் தொடர்பாளர் வாணி இப்ராஹிம், முன்னாள் ராணுவ பிரிவு தலைவர் கோபால், நிர்வாகிகள் வழக்கறிஞர் பிரிவு கிருஷ்ண ராஜ், ஆர்ட் கணேசன் உட்பட ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக பங்கேற்று மத்திய பா.ஜ.க அரசிற்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
Next Story