மத்திய அரசை கண்டித்து ராசிபுரம் தபால் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..

மத்திய அரசை கண்டித்து ராசிபுரம் தபால் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை எனக்கூறி நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் சார்பில் சனிக்கிழமை ராசிபுரம் தபால் நிலையம் முன்பாக ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் நாமக்கல் கிழக்கு மாவட்டத்தலைவர் பி.ஏ.சித்திக் தலைமை வகித்தார். நகர காங்கிரஸ் தலைவர் ஆர்.ஸ்ரீராமுலுமுரளி வரவேற்றார். இந்த ஆர்பாட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் டாக்டர் பி .வி.செந்தில், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பாச்சல் ஏ.சீனிவாசன், காந்தி மாளிகை டிரஸ்டு போர்டு தலைவர் ஏ.என்.சண்முகம், வட்டார காங்கிரஸ் தலைவர்கள் தங்கராஜ், இளங்கோ , ஷேக்உசேன், சொக்கலிங்கமூர்த்தி, கணேசன், பேரூர் காங்கிரஸ் தலைவர்கள் சிங்காரம், செல்வசேகரன், பூபதி, பிரகஸ்பதி, கர்ணன், சண்முகசுந்தரம், கந்தசாமி, இளைஞர் காங்கிரஸ் பெரியசாமி, அருளானந்தம், பொதுக்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சுந்தரம் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். முன்னதாக பட்ஜெட்டில் தமிழகம் புறகணிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி மத்திய அரசுக்கு எதிராகவும், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராகவும் காங்கிரஸ் கட்சியினர் கோஷமெழுப்பினர்.
Next Story