அடகு கடையில் போலி நகை கொடுத்து ஏமாற்றியவருக்கு போலீஸ் வலை

வலை
அரகண்டநல்லூர் அடுத்த மணம்பூண்டி, காந்தி ரோட்டில் அதே பகுதியைச் சேர்ந்த பாண்டுரங்கன் மகன் சுரேஷ், 43; அடகு கடை நடத்தி வருகிறார். கடந்த 22ம் தேதி கடைக்கு வந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும், 26 வயதுடைய ஆண் நபர் ஒருவரும் சேர்ந்து பத்து கிராம் செயினை கொடுத்து அடமானம் வைத்து ரூ.35 ஆயிரம் பெற்றுச் சென்றனர். சந்தேகத்தின் பேரில் நகையை பரிசோதித்த போது, போலி நகை என தெரியவந்தது. இதுகுறித்து சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் அரகண்டநல்லூர் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Next Story