கலையரங்கம் திறப்பு விழா, மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு

கலையரங்கம் திறப்பு விழா, மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொரங்கால் ஊராட்சி கிராம பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பொரங்கால் பகுதியில் கலையரங்கம் அமைத்து தர வேண்டி மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் அவர்களிடம் மனு அளித்தனர்.. அதனை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 7.70 இலட்சம் நிதி ஒதுக்கி பொறங்கால் பகுதியில் கலையரங்கம் அமைக்கும் பணி மேற்கொண்டு அதற்கான திறப்புவிழா இன்று அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றிய செயலாளர் டாக்டர்.ரங்கராஜன் ஏற்பாட்டில் நடைபெற்றது... இதில் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் ரிப்பன் வெட்டி, இனிப்புகள் வழங்கி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கிவைத்தார்.இந்நிகழ்ச்சியில், ஒன்றிய அவைத் தலைவர், ஒன்றிய மகளிர் அணி செயலாளர், ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய குழு உறுப்பினர், ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்..
Next Story