முன்னாள் மாணவர் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது

பள்ளிபாளையத்தில் முன்னாள் மாணவர்கள் சந்தித்துக் கொண்ட கூட்டமானது நடைபெற்றது
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் குமாரபாளையம் சாலையில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.  இந்தப் பள்ளியில் 2021 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியானது  ஞாயிறன்று  முன்னாள் மாணவர்கள் கல்வி பயின்ற கட்டிடத்திலேயே நடைபெற்றது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகு நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி நண்பர்களை சந்தித்த முன்னாள் மாணவர்கள் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி கட்டிப்பிடித்துக் கொண்டும்,  கேலி,கிண்டல் செய்து கொண்டும் ,மலரும் நினைவுகளை பகிர்ந்தபடி,  செல்போனில் குழுவாக செல்பி எடுத்துக் கொண்டும் உரையாடியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இந்த நிகழ்வில் திருமணமான முன்னாள் மாணவர்கள் தங்கள் குழந்தைகளையும்   சந்திப்பு கூட்டத்திற்கு அழைத்து வந்திருந்தனர். சந்திப்பு நிறைவில் முன்னாள் மாணவர்கள்  குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மேலும்  இதில் பங்கேற்ற முன்னாள் மாணவர்கள் கூறும்பொழுது நீண்ட வருடங்களுக்கு பிறகு பள்ளிக்கால நண்பர்களை சந்திப்பது மிகவும் மகிழ்ச்சியானதாக உள்ளது.  நாங்கள் கல்வி பயின்ற பள்ளிக்கு தேவைப்படும் கட்டமைப்பு வசதிகள் உதவிகள் ஆகியவற்றை செய்வது குறித்து இந்த கூட்டத்தில் பேசியுள்ளோம்.. அடுத்தடுத்த கூட்டங்களில் அதற்கான பணிகள் நடைபெறும் என தெரிவித்தனர்.
Next Story