பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

சென்னையில் காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல்
அரசு மருத்துவமனைகளில் உள்ள அனுமதிக்கப்பட்ட கால ஊதிய முறை அரசு விதிகளின்படி தினக்கூலி அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்ட பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு கால முறை ஊதியம் வழங்கக்கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்மாநிலம் முழுவதும் நடைபெற்றது. அதன ஒரு பகுதியாக மதுரை விஸ்வநாதபுரம் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட சுகாதார பணிகள் அலுவலகம் முன்பு தமிழ்நாடு பல்நோக்குமருத்துவமனை பணியாளர்கள் சங்கத்தின் மதுரை மாவட்டம் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் சுசீந்திர குமார் தலைமையில் மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் மாவட்ட பொருளாளர், நாகலட்சுமி மாவட்ட துணை தலைவர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் ஜெயகணேஷ் காளிதாஸ் சேது கண்ணன் சுரேஷ்குமார் காயத்ரி சுமதி சுபாஷ் உட்பட பணியாளர்கள் ஏராளமானோர் கண்டன கோஷங்களை எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அடுத்த கட்ட நடவடிக்கையாக தலைநகர் சென்னையில் காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் தெரிவித்தனர்.
Next Story