காவிரி ஆற்றில் குளிக்க,துணி துவைக்க தடை

காவிரி ஆற்றில் குளிக்க,துணி துவைக்க தடை
காவிரியில் வெள்ளம் வருவதால் ஆற்றில் குளிக்க, துணி துவக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை நிரம்பி வருவதால், காவிரியில் நீர் வரத்து அதிகரித்து வெள்ள அபாயம் ஏற்பட்டு வருகிறது. இதனால் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவிரி ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவும், துணி துவைக்கவும், மொபைல் போனில் செல்பி எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. காவிரி கரையில் உள்ள அனைத்து படித்துறைகளில் இந்த போர்டு வைக்கப்பட்டுள்ளது. போலீசாரும் காவல் பணியில் கண்காணித்து வருகிறார்கள்.
Next Story