பொதுமக்கள் மனுக்களுக்கு விரைந்து தீர்வு

பொதுமக்கள் மனுக்களுக்கு விரைந்து தீர்வு
தீர்வு
பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் பணியாற்ற வேண்டும் என்று அரசு அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்களின் தீர்வு குறித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களில் துறைவாரியாக பெறப்பட்ட மனுக்கள், தீர்வு மனுக்கள், நிலுவையில் உள்ள மனுக்கள், தள்ளுபடி மற்றும் அதற்கான காரணங்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது.
Next Story