குவாரியில் உள்ள தண்ணீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு*

ஒத்தக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
மதுரை யா.ஒத்தக்கடை பகுதியில் உள்ள நரசிங்கம் குவாரியில், தாமோதரன் மகன் சக்கிமங்கலம் பகுதியைச் சேர்ந்த மோதிலால் (46). இவர் பால் குரோம் மோட்டார்ஸ் (பி) லிமிடெட் தனியார் நிறுவனத்தில் பெயிண்டிங் பணி செய்து வந்தார். மோதிலால் இயற்கை உபாதை கழித்துவிட்டு, கால் கழுவ குவாரி அருகில் உள்ள தண்ணீர் பகுதியில் இறங்கி உள்ளார். இதனைத் தொடர்ந்து நிலைத்தடுமாறி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். பின்னர், உடல் தாமாகவே மிதந்து வந்துள்ளது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக, தீயணைப்பு துறையினர் உடலை மீட்டனர். இதுகுறித்து யா.ஒத்தக்கடை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story