சிலைமான் ஊராட்சியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

குசவன் குண்டு சோழபுரம், நல்லூர் விராதனூர் ஊராட்சிகளில் இருந்து பொதுமக்கள் பங்கேற்பு
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட புளியங்குளம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் சிலைமான், புளியங்குளம்,குசவன்குண்டு, நல்லூர், விராதனூர், சோளங்குருணிஆகிய ஊராட்சி மன்ற தலைவர்கள் சாகுல்ஹமீது சௌந்திரபாண்டியன்,பாண்டிவேல், வீரணன்,வாசுதேவன்,மணிராஜ், ஆகியோர் தலைமையிலும், மதுரை தெற்கு வட்டாட்சியர் சரவணன், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பேராட்சிபிரேமா, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நீலாதேவி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மதியரசு,உதவி பொறியாளர்கள் சுகன்யா ரியோ, சிலைமான் காவல் நிலைய எஸ்ஐ மணிமாறன் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள், அலுவலர்கள் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. இந்நிகழ்வில் கூட்டுறவுத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, காவல் துறை, மருத்துவ துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட 29 அரசுத்துறைகள் இம்முகாமில் தனித்தனியே அரங்கங்கள் அமைக்கப்பட்டிருந்தது. சிலைமான், புளியங்குளம்,குசவன்குண்டு, நல்லூர், விராதனூர், சோளங்குருணி உள்ளிட்ட ஐந்து ஊராட்சிகளை சேர்ந்த 1000 க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் தங்களுடைய பிரச்சனைகளை கோரிக்கை மனுக்களாக அளித்தனர். தரப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு 30 நாளில் தீர்வு காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
Next Story