வயநாடு நிலச்சரிவில் தாளவாடியைச் சேர்ந்த மூன்று பேர் பலி

வயநாடு நிலச்சரிவில்  தாளவாடியைச் சேர்ந்த மூன்று பேர் பலி
வயநாடு நிலச்சரிவில் தாளவாடியைச் சேர்ந்த மூன்று பேர் பலி
வயநாடு நிலச்சரிவில் தாளவாடியைச் சேர்ந்த மூன்று பேர் பலி கேரளா மாநிலம் வயநாடு நிலச்சரிவில் தாளவாடி மலைக் கிராமத்தில் இருந்து சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தது. மலைக் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதி காமயன்புரம் கிராமத்தைச் சேர்ந்த ரங்கசாமி (60) இவரது மனைவி புட்டுசித்தம்மா (55). மகன் மகஷே் (20) , ரங்கசாமி, தனது மனைவி சிக்குசித்தம்மா, மகன் மகேஷூடன் முண்டகை பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு தாளவாடி மலைப்பகுதியில் இருந்து கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள முண்டகை என்ற இடத்தில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வயநாட்டில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி இவர்கள் 3 பேரும் உயிரிழந்துள்ளதாகவும, இதில் முதலில் அடையாளம் காணப்பட்ட புட்டு சித்தம்மாவின் உடல் தாளவாடி மலைப் பகுதியில் உள்ள காமையன்புரம் கிராமத்திற்கு கொண்டு வந்து எரியூட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து ரங்கசாமியின் உடல் வயநாட்டில் உள்ள மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த மகன் மகேஷின் உடலை மீட்பு குழுவினர் தேடி வருகின்றனர் .
Next Story