அம்மன் கோவிலில் ஆடிவெள்ளி சிறப்புபூஜை

X
T.gode (Mallasamudram) King 24x7 |2 Aug 2024 9:07 PM ISTமல்லசமுத்திரம் சின்னமாரியம்மன் கோவிலில் ஆடிவெள்ளி சிறப்புபூஜை நடந்தது.
மல்லசமுத்திரம் கிழக்குரத வீதியில் அமைந்துள்ள சின்னமாரியம்மன் கோவிலில் நேற்று, ஆடி வெள்ளியை முன்னிட்டு, அம்மனுக்கு பால், தயிர், கரும்புசாறு மற்றும் பல்வேறு வகையான மூலிகை திரவியங்களால் அபிசேக ஆராதனை நடந்தது. வண்ணமலர்கள் மற்றும் எலுமிச்சை சாற்றப்பட்டு வளையல் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெண்கள் நெய்தீபம்ஏற்றி வழிபட்டனர். அம்னுக்கு கூல் படைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Next Story
