ஆடி வெள்ளி சக்தி மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

சங்ககிரி: வி.என்.பாளையம் சக்தி மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு...
சேலம் மாவட்டம், சங்ககிரி, வி.என்.பாளையத்தில் உள்ள ஸ்ரீ சக்திமாரியம்மன் கோயிலில் 3வது வார ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஆடி 3வது வார வெள்ளிக்கிழமையையொட்டி ஸ்ரீ சக்தி மாரியம்மனுக்கு பால், தயிர், சந்தனம், திருமஞ்சனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பூஜையில் பெண் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை வழிப்பட்டனர். பக்தர்களுக்கு கூழ் வழங்கப்பட்டது இதனையடுத்து மாலையில் கோயில் வளாகத்தில் பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜைகள் நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சுவாமியை வணங்கி சென்றனர். கோயில் நிர்வாகிகள் குழுவின் சார்பில் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டவர்களுக்கு பிரசாதம் மற்றும் மங்கலப்பொருள்கள் வழங்கப்பட்டது.
Next Story