ரேஷன் கடையில் திருட்டு போலீசார் விசாரணை

விசாரணை
உளுந்துார்பேட்டை அருகே உள்ள ஏ. சாத்தனுாரில் ரேஷன் கடையில் இயங்கி வருகிறது. விற்பனையாளராக சத்யா பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடையில் இருந்த 71 கிலோ சர்க்கரை, 52 பாக்கெட் பாமாயில், 36 கிலோ துவரம் பருப்பு திருடு போனது தெரியவந்தது. புகாரின் பேரில், எடைக்கல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story