தீரன் சின்னமலை நினைவு தினம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மரியாதை...
Sangagiri King 24x7 |3 Aug 2024 10:55 AM GMT
சங்ககிரி சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி மலர் தூவி மரியாதை...
சேலம் மாவட்டம் சங்ககிரியில் விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 219 வது நினைவு தினத்தையொட்டி சங்ககிரி மலைக்கோட்டையிலும், அவரது நினைவு மணி மண்டபத்திலும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி தீரன் சின்னமலையின் திருவுருவப்படத்திற்கு மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட தியாகி தீரன் சின்னமலை அவர்களின் 219 ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தமிழக முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி சங்ககிரி மலைக்கோட்டை மற்றும் ஈரோடு பிரிவு பகுதியில் உள்ள அவரது நினைவு மணி மண்டபத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தீரன் சின்னமலை அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் வளையம் வைத்து, வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா, சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் சுந்தரராஜன், ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர் மணி, மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகரன் மாநில பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேஷ் உட்பட அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் உடனிருந்தனர்.
Next Story