சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினம் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் மரியாதை...
Sangagiri King 24x7 |3 Aug 2024 11:37 AM GMT
சங்ககிரி: சுதந்திர போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை நினைவு தினம் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் மலைத்தூவி மரியாதை...
சேலம் மாவட்டம் சங்ககிரியில் சுதந்திர போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை அவர்களின் 219 ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவு மணிமண்டபத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ. ஆர். ஈஸ்வரன் மாலை அணிவித்து வித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.. சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலையின் 219 ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்ட சேலம் மாவட்டம் சங்ககிரி ஈரோடு பிரிவு சாலை பகுதியில் உள்ள அவரது நினைவு மணி மண்டபத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.ஆர். ஈஸ்வரன், தொண்டர்களுடன் இரு சக்கர வாகனம் மற்றும் கார்களில் ஊர்வலமாக வந்து தீரன் சின்னமலை அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன், முன்னாள் நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ், மாவட்டச் செயலாளர்கள் சரவணன், ராஜ்குமார் உட்பட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள்,ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.
Next Story