வல்வில் ஓரி மன்னனுக்கு மலர் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்ற

வல்வில் ஓரி மன்னனுக்கு மலர் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்ற
வல்வில் ஓரி மன்னனின் நினைவை போற்றும் வகையில் நிகழ்ச்சி நடைபெற்றது
ஆண்டுதோறும் ஆடி 18 நாளில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையை ஆண்ட, வல்வில் ஓரிமன்னனுக்கு அரசு விழா நிகழ்ச்சிகள் இரண்டு நாட்கள் நடைபெறுவது வழக்கமான ஒன்றாகும். இந்நிலையில் நிகழ்ச்சியின் இரண்டாம் நாளான சனிக்கிழமையன்று நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள வெப்படை நால்ரோடு பகுதியில், வல்வில் ஓரி மன்னன் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்வானது நடைபெற்றது . இதில் புதிய திராவிட கழகம் மற்றும் கொங்கு நாடு வேட்டுவ கவுண்டர் இளைஞர் நல சங்கம் சார்பில் ஏராளமானோர் கலந்து கொண்டு வாழ்வில் ஓரி மன்னனின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் . திமுக மத்திய ஒன்றிய பொறுப்பாளர் தளபதி செல்வம், புதிய திராவிட கழகம் கட்சியின் மாவட்ட செயலாளர் காடையார் சரவணன், பள்ளிபாளையம் ஒன்றிய செயலாளர் கௌதம், மாவட்ட நிர்வாகி விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். மேலும் இந்த நிகழ்வின் காரணமாக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Next Story