சுதந்திரபோராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை நினைவு தினம் தேமுதிக சார்பில் மரியாதை....
Sangagiri King 24x7 |3 Aug 2024 4:53 PM GMT
சங்ககிரி: சுதந்திரபோராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலையின் 219 ம் ஆண்டு நினைவு தினம் தேமுதிக சார்பில் மரியாதை....
சேலம் மாவட்டம் சங்ககிரியில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் தினத்தினையொட்டி அவரது நினைவு மணிமண்டபத்தில் தேமுதிக சார்பில் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்பாபு தலைமையில் தீரன் சின்னமலை அவர்களின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி செலுத்தப்பட்டது. சுதந்ததிர போராட்ட வீரர் தீரன்சின்ன நினைவு தினத்தினையொட்டி சங்ககிரி ஈரோடு பரிவு சாலை பகுதியில் உள்ள தீரன்சின்னமலை நினைவு மணி மண்டபத்தில் தேமுதிக சார்பில் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்பாபு தலைமையில்,சங்ககிரி பேரூர் கழகச் செயலாளர் சுந்தரவடிவேல் முன்னிலையில் நிர்வாகிகள் தீரன் சின்னமலை அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். அப்போது மாவட்டத் துணை செயலாளர் ரமேஷ், மாவட்ட பொருளாளர் தங்கமணி, மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் சசிகுமார், தலைமை பொதுக்குழு உறுப்பினர் சுந்தரராஜன், சங்ககிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயபூபதி, எடப்பாடி ஒன்றிய செயலாளர் மெய்வேல், கொங்கணாபுரம் ஒன்றிய செயலாளர் ஆரோக்கியராஜா, நங்கவள்ளி ஒன்றிய செயலாளர் மாரியப்பன், மேச்சேரி கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கம், மகுடஞ்சாவடி ஒன்றிய பொறுப்பாளர் கனகராஜ், அரிசிராமணி பேரூர் செயலாளர் சுப்பிரமணி, மாவட்ட சார்புபணி நிர்வாகிகள் மாரியப்பன்,சண்முகம் உட்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.
Next Story