ஆடி அமாவாசை சோழீஸ்வரர் திருக்கோயிலில் சிறப்பு பூஜை
Sangagiri King 24x7 |4 Aug 2024 7:38 AM GMT
சங்ககிரி: ஆடி அமாவாசை அரசிராமணி சோளீஸ்வரர் திருக்கோயில் சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் தரிசனம்....
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட அரசிராமணி பகுதியில் மேற்கு திசையை நோக்கி அமைந்துள்ள அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோவிலில் ஆடி அமாவாசையையொட்டி அருள்மிகு சோழீஸ்வரர் உடனமர் பெரியநாயகி அம்மன் சுவாமிகளுக்கு பால்,தயிர், சந்தனம்,திருமஞ்சனம்,பன்னீர், இளநீர்,திருநீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய,திரவிய பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபக்திபாடல்களை பாடி அருள்மிகு சோளீஸ்வரர் உடனமர் பெரியநாயகி அம்மன் சுவாமிகளை வழிபட்டு சென்றனர்.
Next Story