சத்தி அருகே பைக் - ஜீப் மோதி கொண்ட விபத்தில் ஒருவர் பலி

சத்தி அருகே பைக் - ஜீப் மோதி கொண்ட விபத்தில் ஒருவர் பலி
சத்தி அடுத்த செண்பகபுதுார் கிராமம் தங்கநகரத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன் மினி வேன் டிரைவர். இவரது மகன் ஹரி (எ) ஹரிபிரசாத் (18) ,நடுப்பாளையத்தை சேர்ந்த துரைசாமி மகன் நிவேஸ் (17) இருவரும் நண்பர்கள் நேற்று முன்தினம் பைக்கில் சத்தியிலிருந்து செண்பகபுதுாருக்கு சென்று கொண்டு இருந்தனர். அவர்களுக்கு முன்பாக சத்தி வரதம்பாளையத்தை சேர்ந்த சின்னசாமிகவுண்டர் மகன் செந்தில்குமார் என்பவர் அதே ரோட்டில், அதே திசையில் பைக் சென்றுள்ளார். எஸ்.ஆர்.டி கார்னர் அருகே உள்ள டெலிபோன் அலுவலகம் எதிரே இருபைக்களும் எதிர்பாரத விதமாக மோதி இதில் ஹரி ஒட்டி சென்ற பைக் கட்டுப்பட்டை இழந்து எதிரே ராமபையலூரைச்சேர்ந்த மாணிக்கம் மகன் பாரதி மோகன் என்பவர் ஓட்டிவந்த ஜீப்பின் முன்புறம் சென்று மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஹரி, நிவேஸ் மற்றும் செந்தில் குமார் ஆகியோர் படுகாயமடைந்தனர். நிவேஸ், ஹரி சத்தி அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை பின் நிவேஸ் பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கும், ஹரி கோவை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஹரி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து சத்தி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story