சுப்பிரமணியர் உற்சவ சுவாமிக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜை
Sangagiri King 24x7 |4 Aug 2024 4:57 PM GMT
சங்ககிரி: ஆடி அமாவாசை சுப்பிரமணியர் உற்சவ சுவாமிக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜை...
சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த அக்கமாபேட்டை பாவடி திடல் வளாகத்தில் உள்ள அருள்மிகு சுப்ரமணியர் கோயிலில் உள்ள உற்சவ சுவாமிகளுக்கு முதன்முறையாக ஞதங்ககவசம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அருள்மிகு சுப்ரமணியர் சுவாமி மூலவருக்கும், உற்சவர் அருள்மிகு முருகன் உடனமர் வள்ளி, தெய்வானை சுவாமிகளுக்கு பால், தயிர், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், பன்னீர், இளநீர், உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது.பின்னர் உற்சவர் அருள்மிகு முருகன் உடனமர் ஸ்ரீவள்ளி, தெய்வாணை சுவாமிக்கு பக்தர்கள் சார்பில் வழங்கிய தங்ககவசம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமிகளை வழிபாடு செய்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story