ராமநாதபுரம் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் தில்லை ஏந்தல் ஊராட்சியில் 500 பிளாட் ரோஸ் கார்டனில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை எம்பி நவாஸ்கனி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தில்லையந்தல் ஊராட்சியில் 500 பிளாட் ரோஸ் கார்டனில் புதிய அங்கன்வாடி கட்டிடத்தை ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் கீழக்கரை நகராட்சி துணைத் தலைவர் ஹமீதுசுல்தான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அப்துல் ஜப்பார் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் வருடம் 365 நாளுக்கும் தடையற்ற குடிநீர் வழங்குவதற்கு மிகப்பெரிய திட்டத்தை ஏற்பாடு செய்திருக்கின்றது இந்த அரசு மற்றும் ஏராளமான திட்டங்களை நிறைவேற்றுவோம் என்று கூறினார். நடந்து முடிந்து நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை தேடித் தந்தமைக்கு அனைவரிடத்திலும் எம்பி நவாஸ்கனி நன்றி கூறினார் இதை அடுத்து கீழக்கரை முக்கு ரோட்டில் இருந்து அங்குள்ள அனைத்து பகுதி மக்களிடத்திலும் வாகனத்தின் மூலம் பொது மக்களுக்கு நன்றி தெரிவித்து சென்றார்.
Next Story