நாமக்கல்லில் சிபிசிஐடி போலீசார் சோதனை..!

நாமக்கல்லில் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நெருக்கமான நபரின் அலுவலகங்களில் சிபிசிஐடி போலீசார் சோதனை
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நெருக்கமான நபர்களுக்கு சொந்தமான இடங்களில் தற்போது சிபிசிஐடி போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் இந்நிலையில் நாமக்கல் திருச்சி சாலையில் நாமக்கல் கன்ஸ்டரக்சன் என்ற பெயரில் கட்டுமான தொழில் நடத்தி வரும் பாலகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான அலுவலகம் மற்றும் சேலம் சாலையில் அவரது மற்றொரு அலுவலகத்திலும் தற்போது 20க்கும் மேற்பட்ட சிபிசிஐடி போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பாலகிருஷ்ணன் அதிமுக ஆட்சியில் சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளில் அரசு சார்பில் பல்வேறு கட்டுமான பணியை எடுத்து செய்துள்ளார். இவர் பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு மிகவும் நெருக்கமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது அவருக்கு சொந்தமான இடங்களில் தற்போது சிபிசிஐடி போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருவது நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story