தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
Maduranthakam King 24x7 |5 Aug 2024 12:18 PM GMT
தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் தனியார் திருமண மண்டபத்தில் தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் பெருமாள், அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் சிவக்குமார் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் எம்.ராஜேந்திரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்அப்பொழுது கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் ஆகஸ்ட் 25 மறைந்த விஜயகாந்த் பிறந்த நாள் விழாவை ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் பள்ளி மாணவ மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வாங்குவது, வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக நிர்வாகிகள் வெற்றி பெற ஆயராது பாடுபட வேண்டும், பூத் கமிட்டி நிர்வாகிகள் அமைத்தல், புதிய மகளிர் அணி சேர்த்தல், அனைத்து கிளைகளையும் கழக கொடி ஏற்றுதல், புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் பார்த்திபன்,பொதுக்குழு உறுப்பினர் விஜயகுமார், செயற்குழு உறுப்பினர் துரைராஜ், மற்றும் சரவணன், அச்சிறுப்பாக்கம் பேரூர் கழக செயலாளர் அசாருதீன், சண்முகம், தங்கராஜ், மோகன், வேலு, ராஜி, பாண்டியன், செந்தில்குமார், உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து அச்சிறுப்பாக்கம் சந்தை பகுதியில் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 500 க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு அறுசுவை உணவு அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story