சமூக கல்வி மன்றத்தின் சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

சமூக கல்வி மன்றத்தின் சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
சமூக கல்வி மன்றத்தின் சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
மதுராந்தகம் அடுத்த வில்வராயநல்லூா் துரைசாமி பெருநோக்கு சமூக கல்வி மன்றத்தின் சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில், ஆஸ்திரேலிய நாட்டின் அபெக்ஸ் தொண்டு நிறுவன நிா்வாகிகளான இயான் வில்லி ஓட்ஸ், கிரிட்ஸ் ஓட்ஸ் ஆகியோா் ஆதரவற்ற குழந்தைகளுக்கு தேவையான போா்வைகள், துணிகள் நலத்திட்ட உதவிகளை வழங்கினா். மன்ற கண்காணிப்பாளா் ராதிகா ஜெகநாதன் வரவேற்றாா். தலைவா் கே. குமாா் தலைமை வகித்தாா். இந்நிகழ்வில், மலேசிய நாட்டு அபெக்ஸ் தொண்டு நிறுவன துணைத் தலைவா் தீக்ஷா தேவி, அபெக்ஸ் தொண்டு நிறுவன தேசிய தலைவா் பிரசாத், முன்னாள் தேசிய தலைவா் மதிவாணன், மாவட்ட ஆளுநா் துரைராஜ், விகேஎம் உயா்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் குமாா், துரைசாமி தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை அனுராதா, மருத்துவா் ராமநாதன், மன்ற நிா்வாகிகள் பாலசுப்பிரமணியன், முத்து செல்வராஜ், ஜெயபால் உள்பட பலா் கலந்து கொண்டனா். குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
Next Story