கழிவுநீர் பாதையை சேதப்படுத்திய நபர்களை தேடும் போலீசார்

கழிவுநீர் பாதையை சேதப்படுத்திய   நபர்களை தேடும் போலீசார்
குமாரபாளையம் அருகே கழிவுநீர் பாதையை சேதப்படுத்திய நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசராணை செய்து வருகிறார்கள்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, நல்லாம் பாளையம் பகுதியில் தனியார் பிளாட்டிலிருந்து கழிவுநீர் பாதையை பொக்லின் மூலம் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனை அதே பகுதியை சேர்ந்த கஸ்தூரி மகன் ஜம்பு, இந்திராணி கணவர் அவினாசி, பாறைகாடு சேகர், குஞ்சாயி மகன் கார்த்தி, இன்னும் பலர் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பள்ளிபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் கிரிஜா குமாரபாளையம் போலீசில் புகார் செய்ய, குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
Next Story