ராமநாதபுரம் ஓய்வுதியரசர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
Ramanathapuram King 24x7 |6 Aug 2024 6:15 AM GMT
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்துக்குள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு அனைதுத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்துக்குள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் மருத்துவ காப்பீட்டு திட்ட குறைபாடுகளை கலைந்து முழுமையான காசில்லா மருத்துவத்தை உறுதி செய்ய வலியுறுத்த கோரியும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சைக்கு பின் நிலுவையில் உள்ள செலவு தொகையை உடனே வழங்க வேண்டும் என்றும் ஓய்வூதியர் செலவுத்தொகை கோரி அனுப்பப்படும் விண்ணப்பத்தின் நிலையை அறிய வலைத்தளத்தை உருவாக்கவேண்டும் என்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
Next Story