பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
நிகழ்ச்சி
திருக்கோவிலூரில் ரோட்டரி சங்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் கபிலர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி ரோட்டரி சங்க தலைவர் முனைவர்.M.செந்தில்குமார் நடைபெற்றது.இதில் கள்ளக்குறிச்சி மாவட்ட மனநல மருத்துவர் Dr. பிரவீணா கலந்து கொண்டு மாணவர்களிடையே போதைப் பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் தீங்குகள் குறித்தும், விளக்கிப் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.இந்த நிகழ்வில் ரோட்டரி சங்க சாசன தலைவர் எஸ்.எஸ்.வாசன், சங்க செயலாளர் MS.கோதம்சந்த், பொருளாளர் சௌந்தரராஜன், ரோட்டரி சங்க உறுப்பினர் முத்துக்குமாரசாமி மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story