செல்லியம்மன் கோவிலில் ஆடி மாத திருவிழா
Maduranthakam King 24x7 |6 Aug 2024 11:02 AM GMT
செல்லியம்மன் கோவிலில் ஆடி மாத திருவிழா
செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் நகர் பகுதியில் உள்ள பழமை வாய்ந்த சேற்றுக்கால் பிடாரி ஸ்ரீ செல்லியம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆடி மாத திருவிழா நடைபெறுவது வழக்கம்.. இந்த நிலையில் இந்த ஆண்டு ஆடி மாத திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை இன்று காப்பு கட்டுகளுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து இன்று பிடாரி ஸ்ரீ செல்லியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது இதனைத் தொடர்ந்து மதுராந்தகம் நகர் பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சேற்றுக்கால் பிடாரி ஸ்ரீ செல்லியம்மனுக்கு பொங்கல் வைத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.இந்த விழாவில், சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story