மதுராந்தகம் பகுதியில் துண்டு பிரசுரங்கள் வழங்கிய அதிமுகவினர்

மதுராந்தகம் பகுதியில் துண்டு பிரசுரங்கள் வழங்கிய அதிமுகவினர்
மதுராந்தகம் பகுதியில் துண்டு பிரசுரங்கள் வழங்கிய அதிமுகவினர்
செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் மதுராந்தகத்தில் திமுக அரசின் அவல நிலைகளை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் துண்டு பிரசுரம் வழங்கிய அதிமுகவினர்
செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில், மதுராந்தகம் நகர் பகுதியில் தற்போது நடைபெற்று வரும் திமுக அரசின் அவல நிலைகளை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் துண்டு பிரசுரங்களை மதுராந்தகம் நகர கழக செயலாளர் பூக்கடை சரவணன் ஏற்பாட்டில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் தலைமையில் 100- க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் மதுராந்தகம் நகர் பகுதியில் உள்ள முக்கிய வீதிகளில் மற்றும் வார சந்தை ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி திமுக ஆட்சியில் போதை பொருள் மற்றும் கஞ்சா கடத்தல் , மாணவர்களிடையே போதைப்பொருள் புழக்கம் , கள்ளச்சாராய மரணங்கள், மற்றும் தமிழகத்தை போதை பொருள் கடத்தல் தலைமையிடமாக சீரழித்த திமுக அரசின் அவல நிலங்களை எடுத்துரைத்தனர். இந்த நிகழ்ச்சியில் மதுராந்தகம் ஒன்றிய குழு பெருந்தலைவர் கீதா கார்த்திகேயன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆனூர் பத்வாசலம், உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story