கடம்பூர் மலைக் கிராமத்தில் சாணி பவுடர் குடித்து இளம் பெண் தற்கொலை

கடம்பூர் மலைக் கிராமத்தில் சாணி பவுடர் குடித்து இளம் பெண் தற்கொலை
கடம்பூர் மலைக் கிராமத்தில் சாணி பவுடர் குடித்து இளம் பெண் தற்கொலை
கடம்பூர் மலைக் கிராமத்தில் சாணி பவுடர் குடித்து இளம் பெண் தற்கொலை ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதி, குத்தியாலத்தூர் ஊராட்சி ஓசப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார்-சந்தியா தம்பதியர், இவர்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் சந்தியா அவரது கணவர் மற்றும் மாமனார், மாமியார் ஆகியோருடன் கடம்பூரில் திருவிழா ஒன்றுக்கு சென்றுள்ளனர். சந்தியா மட்டும் ஓசப்பாளையம் வீட்டிற்கு வந்துள்ளார், இவரது மாமியார் கடம்பூரில் இருந்து விட்டார். சந்தியாவின் கணவர் மற்றும் மாமனார் அங்கிருந்து வேலைக்கு சென்று விட்டனர், இந்நிலையில் நேற்று காலை சந்தியாவின் வீட்டின் அருகே இருந்தவர் சிவக்குமாருக்கு போன் செய்து உங்கள் மனைவி சந்தியா வாந்தி எடுத்து உள்ளார் என்று கூறியுள்ளார். அருகில் இருந்தோர் கேட்டதற்கு சாணிப்பவுடர் குடித்து விட்டதாக சந்தியா கூறி உள்ளார், உடனே அருகில் இருந்தோர் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக | சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சந்தியாவை சேர்த்து உள்ளனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சந்தியா இறந்து விட்டதாக தெரிவித்ததை அடுத்து உடல் பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர், போலீசார் விசாரணையில் முதற்கட்டமாக குடும்ப பிரச்சினை காரணமாக சந்தியா பூச்சி மருந்து குடித்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
Next Story