மது போதையில் நண்பரை தாக்கிய வழக்கில் இருவர் தலைமறைவு
Komarapalayam King 24x7 |6 Aug 2024 1:59 PM GMT
குமாரபாளையம் அருகே மது போதையில் நண்பரை தாக்கிய வழக்கில் இருவர் தலைமறைவாகினர்கள்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஆனங்கூர் பிரிவு பகுதியில் வசிப்பவர் விவேக், ,29. கூலித்தொழிலாளி. இவர் தன் நண்பர்களான அப்பு (எ) பெருமாள், முரளி ஆகியோருடன் ஆக. 3ல் மது குடித்துள்ளார். அப்போது வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக நேற்று மாலை 04:00 மணியளவில் விவேக், தன் வீட்டில் இருந்த போது, நண்பர்கள் இருவரும் மது போதையில் வந்து தகாத வார்த்தை பேசியதுடன், கைகளால் அடித்து சென்றனர். இது குறித்து விவேக், குமாரபாளையம் போலீசில் புகார் செய்ய, வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவான பெருமாள், முரளி இருவரையும் தேடி வருகின்றனர்.
Next Story