திடீரென பெய்த கனமழை பள்ளி மாணவ, மாணவிகள் அவதி..
Sangagiri King 24x7 |6 Aug 2024 3:23 PM GMT
சங்ககிரி:திடீரென பெய்த கனமழை பள்ளி மாணவ, மாணவிகள் அவதி..
சேலம் மாவட்டம், சங்ககிரி, மற்றும் தேவூர், அரசிராமணி, செட்டிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை சங்ககிரி, தேவூர், அரசிராமணி, செட்டிப்பட்டி, குள்ளம்பட்டி, காவேரிப்பட்டி மோட்டூர், வட்ராம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை முதல் வெயில் வாட்டி வந்த நிலையில் மாலையில் திடீரென குளிர்ந்த காற்று வீசியது இதனை அடுத்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளிலும், விவசாய நிலங்களிலும் மழை நீர் தேங்கி நின்றது. அரசிராமணி சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது . இரவில் தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசியது. சங்ககிரியில் திங்கள்கிழமை இரவு 7.4 மில்லி மீட்டர் மழை பெய்தது.சங்ககிரியில் சேலம், திருச்செங்கோடு, எடப்பாடி பேருந்து நிறுத்தங்களில் பயணிகள் நிழற்கூடம் இல்லாததால் பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர்.
Next Story