சங்ககிரி பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்த சமூக அலுவலர்கள்...

சங்ககிரி :பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்த சமூக ஆர்வலர்கள்...
சேலம் மாவட்டம், சங்ககிரி பேரூராட்சிக்குட்ப்பட்ட சாக்கடையில் நெகிழி பாட்டில்களை சாக்கடை கால்வாய்களில் வீசப்படுவதை தூய்மைப்படுத்தி சாலையில் போட்டதால் அதனை அப்புறப்படுத்த பேரூராட்சி நிர்வாகத்திற்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். சங்ககிரி பழைய எடப்பாடி சாலை எட்டு ராட்டின கிணற்றிற்கு எதிரே ஈஸ்வரன் கோயிலுக்கு செல்லும் சாலையில் இரு புறமும் உள்ள சாக்கடையில் கடந்த சில வாரங்களாக அதிகமான காலை நெகிழி பாட்டில்களை தூய்மைபணியாளர்கள் குப்பை மண்களோடு சேர்ந்து மேலே எடுத்து போட்டு தூய்மை படுத்தி வருகின்றனர். எனவே தூய்மைப்படுத்திய பாட்டில்களை உடனடியாக எடுத்துச் செல்லுமாறும் இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story