மஹா முனியப்பன் கோயிலில் ஆடி திருவிழா நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

சங்ககிரி: மஹா முனியப்பன் கோயிலில் ஆடி திருவிழா ஆடு கோழிகளை பழகிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த சத்யா நகரில் ஸ்ரீ மஹா முனியப்பன் கோயில் ஆடித்திருவிழா விமர்சையாக நடைபெற்றது. ஸ்ரீ மஹா முனியப்பன் கோயில் ஆடித்திருவிழாவினையொட்டி பல்வேறு திவ்யபொருள்களை கொண்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது இதில் சத்யா நகர், ஆசிரியர் காலனி, சங்ககிரி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமிகளை வழிப்பட்டுச் சென்றனர். பக்தர்கள் ஆடு, கோழிகளை பலியிட்டு நேர்த்திகடனை செலுத்தினர்.
Next Story