ஆக்கிரமிப்பு குளங்களில் அதிகாரிகள் அளவீடு கறம்பக்குடி அருகே பரபரப்பு!

ஆக்கிரமிப்பு குளங்களில் அதிகாரிகள் அளவீடு கறம்பக்குடி அருகே பரபரப்பு!
அரசு செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே ஆக்கிரமிப்பில் உள்ள குளத்தை அளவீடு செய்யும் பணி நடைபெற்றது. கறம்பக்குடி அருகேயுள்ள துவார் ஊராட்சியில் பல ஏக்கர் பரப்பளவில் இருந்த பாப்பான்குளத்தின் பெரும்பகுதியை சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தனர். இது குறித்து அரசு அலுவலர்களிடம் அப்பகுதி மக்கள் பலமுறை முறையிட்டும் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் கறம்பக்குடி, கந்தர்வகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இந்த குளம் ஆக்கிரமிப்பு தொடர்பாக அண்மையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.இந்நிலையில், துவார் கிராமத்தில் ஆக்கிரமிப்புக்கு உள்ளான குளத்தை அளவீடு செய்யும் பணியில் கந்தர்வக்கோட்டை வட்டாட்சியர் விஜயலெட்சுமி தலைமையிலான அலுவலர்கள் ஈடுபட்டனர். மழையூர் போலீஸார் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனர்.
Next Story