தமிழகத்தின் முன்னாள் முதல்வருக்கு நினைவு தினம் அனுசரிப்பு...
Sangagiri King 24x7 |7 Aug 2024 7:31 AM GMT
சங்ககிரி: இடங்கணசாலை நகர திமுக சார்பில் கலைஞரின் ஆறாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு....
தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 6 ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இடங்கணசாலை நகர திமுக சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது... சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட இடங்கணசாலை நகராட்சி பேருந்து நிலையம் முன்பு தமிழக முன்னாள் முதலமைச்சரும்,திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் 6ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு இடங்கணசாலை நகர மன்றத் தலைவர் கமலக்கண்ணன் தலைமையில் இடங்கணசாலை நகரச் செயலாளர் செல்வம் முன்னிலையில் இடங்கணசாலை நகர திமுக சார்பில் பல்வேறு கோஷங்களை எழுப்பி கருணாநிதியின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அப்போது இலங்கணசாலை நகர மன்ற துணைத் தலைவர் தளபதி, மற்றும் நகர திமுக நிர்வாகிகள் வார்டு செயலாளர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், சார்பணி நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.
Next Story