கலைஞரின் நினைவு தினத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு அன்னதானம்
Maduranthakam King 24x7 |7 Aug 2024 10:32 AM GMT
மதுராந்தகத்தில் கலைஞரின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கும் விழா
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகரில் 21 -வது வார்டு திமுக சார்பில் மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் நூரூல் அமீன் ஏற்பாட்டில் கலைஞர் அவர்களின் 6-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கலைஞர் அவர்களின் திருவுருவ படத்திற்கு நகர செயலாளர் கே.குமார் அவர்கள் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் ஏழை எளிய பொதுமக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மதுராந்தகம் நகர மன்ற உறுப்பினர்கள் சரளா தனசேகர், அண்டோ சிரில் ராஜ், திமுக நிர்வாகிகள் பிரேம்சந்த், எம்.சி.கோதண்டம், ராஜேஷ், M.ராஜா, பன்னீர், கபிலன், சுபம் ரவி, காதி மோகன், புகாரி, தேவபிரகாஷ், தென்றல் குணா, ஜெயச்சந்த் ஜெயின், வெங்கட், வீனஸ் பாபு, சுரேஷ்குமார் முருகேசன், உள்ளிட்ட திமுகவினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story