சிவன் ஆலயத்தில் சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் தரிசனம்.‌..

சங்ககிரி: ஆடிப்பூரம் அரசிராமணி சோழீஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் தரிசனம்....
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட அரசிராமணி பேரூராட்சி பகுதியில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த மேற்குத் திசையை நோக்கி அமர்ந்துள்ள சோழீஸ்வரர் திருக்கோயிலில் ஆடிப்பூரத்தையொட்டி அருள்மிகு சோளீஸ்வரர் உடனமர் பெரியநாயகி அம்மன் சுவாமிகளுக்கு பால்,தயிர், சந்தனம்,திருமஞ்சனம்,பன்னீர், இளநீர்,திருநீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய,திரவிய பொருளைக் கொண்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்ற பின்னர். மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அலங்கார பூஜைகள் நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அருள்மிககு சோழீஸ்வரர் பெரியநாயகி அம்மனை வழிபட்டு சென்றனர்.
Next Story