வீட்டில் மது பாட்டில் விற்பனையில் ஈடுபட்டவர் கைது

வீட்டில் மது பாட்டில் விற்பனையில் ஈடுபட்டவர் கைது
கைது
கள்ளக்குறிச்சி அடுத்த உலகங்காத்தான் கிராமத்தில் வீட்டில் பதுக்கி வைத்து கள்ளத்தனமாக மதுபாட்டில் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அப்பகுதிக்கு சென்று சோதனை செய்தனர். அதில், உலகங்காத்தான் காலனியைச் சேர்ந்த கண்ணன் மகன் லட்சுமணன்,38; என்பவர் வீட்டில் மதுபாட்டில் விற்பனை செய்தது தெரிந்தது. இதனையடுத்து போலீசார் அவரை பிடித்து வழக்கு பதிந்து கைது செய்தனர்.
Next Story