குடிபோதையில் அரசு வாகனம் ஓட்டிய டிரைவர் சஸ்பெண்ட்

குடிபோதையில் அரசு வாகனம் ஓட்டிய டிரைவர் சஸ்பெண்ட்
சஸ்பெண்ட்
கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் ஈரியூருக்கு செல்லும் அரசு டவுன் பஸ்சில் பயணிகள் பலர் ஏறி காத்திருந்தனர். அப்போது டிரைவர் அக்கரபாளயைம் ராஜா,45; குடிபோதையில் பஸ்சை ஓட்ட முயன்றதை கண்ட பயணிகள், அங்கிருந்த நேர காப்பாளர் அலுவலகத்திற்கு சென்று புகார் தெரிவித்தனர். உடன் அங்கு வந்த டிரைவர் ராஜா, புகார் தெரிவித்த பயணிகளிடம் நீ தான் சரக்கு வாங்கி கொடுத்தியா என கேட்டு தகராறு செய்ததால் பரபரப்பு நிலவியது. அதனைத் தொடர்ந்து மாற்று டிரைவர் மூலம் பஸ் இயக்கப்பட்டது. குடி போதையில் அரசு பஸ் டிரைவர் பயணிகளிடம் தகராறு செய்யும் வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வைரலாகியது. அதனைத் தொடர்ந்து அரசு பஸ் டிரைவர் ராஜாவை 'சஸ்பெண்ட்' செய்து அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கோட்ட பொது மேலாளர் சதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
Next Story