ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு வளையல் அலங்காரம்!
Pudukkottai King 24x7 |8 Aug 2024 4:45 AM GMT
பக்தி
கந்தர்வகோட்டையிலுள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜை நடைபெற்றது. அம்மனுக்கு மஞ்சள், திரவியம், குங்குமம்,பஞ்சகாவியம், இளநீர், பச்சரிசி மாவு, பன்னீர், நெய், தேன் உள்ளிட்ட 18 வகை அபிஷேகங்கள் நடைபெற்று அதனை தொடர்ந்து வளையல் அலங்காரத்தில் மகா தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
Next Story