கந்தர்வகோட்டையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்!

கந்தர்வகோட்டையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்!
ஒரு பிரச்சனைகள்
கந்தர்வகோட்டையில் தேசிய நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. கந்தர்வகோட்டை கடை வீதியில் புதுக்கோட்டை- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ள தேசிய நெடுஞ்சாலை துறையினர் ஒவ்வொரு வணிக நிறுவனத்திற்கும் தனித்தனிய சுற்றறிக்கைகள் வழங்கினார்கள்.இதையேற்று பல வணிகர்கள் தாமாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டனர். இந்நிலையில் அறிவித்தபடி புதன்கிழமை வருவாய்த் துறையினர், காவல்துறை, உள்ளாட்சித் துறை, தேசிய நெடுஞ்சாலை துறையினர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் எஞ்சிய ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.ஆக்கிரமிப்பு அகற்றும் பணியானது தேசிய நெடுஞ்சாலைத் துறை துறையினர், வட்டாட்சியர் எஸ். விஜயலட்சுமி, காவல் ஆய்வாளர் கோ. சுகுமார் ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்றது.
Next Story