ஆலங்குடியில் மது எடுப்பு திருவிழா!

பக்தி
ஆலங்குடி நாடியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடிமாதம் நன்றாக மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி மது எடுப்பு திருவிழா நடத்தப்ப டுவது வழக்கம். அந்த வகையில் நேற்று மது எடுப்பு திருவிழா நடந்தது. கல்லாலங்குடி, ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, கரும்பி ரான்கோட்டை சூரன்விடுதி, சம்புரான்பட்டி,காட்டுப்பட்டி மற்றும் சுற்றுவட்டார மங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண் கள் குடத்தில் நவதானியங்களை நிரப்பி மல்லிகை மலர்களால் அலங்கரித்து எடுத்து ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். அம்மன் பாடல்களை பாடியபடி நாடியம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து வாண வேடிக்கை நடந்தது. அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.
Next Story